Tamilசெய்திகள்

இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பரவல்! – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு நேற்று காலை வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, 59 ஆயிரத்து 662 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 834 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

கொரோனா பரவியவர்களில் 17 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். மேலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 981 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்படிருந்தது.

இந்நிலையில், கொரோனா தொடர்பான தகவல்களை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (10 மார்ச்) காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 62 ஆயிரத்து 939 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 41 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 357 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *