Tamilசெய்திகள்

உக்ரைன் உணவகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 16 மாதங்களைக் கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், ஓட்டல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகளும், 14 வயதுடைய இரட்டை சகோதரிகளும் அடங்குவர்.