Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தன

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி விளையாடுகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.