Tamilசினிமா

‘எண்ணி துணிக’ படத்தின் டப்பிங்கை முடித்தார் நடிகர் ஜெய்

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘எண்ணி துணிக’. இப்படத்தில் முற்றிலும் புதுமையான பாத்திரத்தில், வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார் நடிகர் ஜெய். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் ஜெய்.

ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் எஸ்.ஜே.வெற்றிச் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின், இசை, டிரைலர் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.