Tamilசெய்திகள்

கள்ளச்சாரம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாடில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்அடுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்க கூடாது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால உள்நோக்கோத்தோடு சில அமைதியை கெடுக்க செயல்படுவர், அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக காரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வேதனையளிக்கிறது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிள் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்க கூடாது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தணடனை பெற்று தர வேண்டும். சமூக ஊடகங்களை கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.