Tamilசெய்திகள்

கேரளாவில் இரண்டாவது முறையாக வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு தாக்குதல்

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரெயில் ஓடத்தொடங்கிய ஒருவாரத்தில் அதாவது கடந்த 1-ந் தேதி மலப்புரம் பகுதியில் மர்மநபர் ரெயில் மீது கல்வீசினார். இதில் ரெயிலின் கண்ணாடியில் கீறல் விழுந்தது. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் 2-வது முறையாக நேற்று மாலை வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் மர்மநபர்கள் கல்வீசி தாக்கி உள்ளனர். இதிலும் ரெயிலின் கண்ணாடி சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த போது நடந்துள்ளது.இம்முறை கண்ணூர் பகுதியில் ரெயில் மீது கல்வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.