Tamilசெய்திகள்

கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது

தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஓர் அளவு மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

வழக்கமாக கேரளாவில் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் 5-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை நாளை (8-ந்தேதி) கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *