Tamilவிளையாட்டு

சர்வதேச அலைசறுக்கு போட்டி – ஜப்பான் வீரர்கள் முன்னிலை

தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை கடந்த 14-ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 70 வீரர்கள் வந்துள்ளனர்.

இதில் 3-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவின் 48 சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் நாட்டு வீரர்கள் பங்கேற்று சாகசம் செய்தனர். இதில் ஜப்பான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். இப்போட்டிகள் வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது.

கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.