Tamilசெய்திகள்

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார்.

ரேசன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.