Tamilசெய்திகள்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இப்போது மழை குறைந்த நிலையில் வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்த நிலையில் விமான சேவை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.