Tamilசெய்திகள்

ஜனாதிபதி தேனீர் விருந்து – பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஜனாதிபதி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி , பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், துணை அதிபர் ஜகதீப் தக்கர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.