Tamilசெய்திகள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பெரிய ஊடுருவல் தடுப்பு – இந்திய ராணுவம் தகவல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர்  போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு சிறிய  ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய  ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக மூன்று ஊழியர்களை ஜம்மு-காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.