Tamilசெய்திகள்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.