Tamilசெய்திகள்

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பால் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.