Tamilசெய்திகள்

தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது – சுப்ரியா சுலே கருத்து

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம். தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும்.

அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.