Tamilவிளையாட்டு

நாண்டெஸ் சர்வதேச் பேட்மிண்டன் போட்டி – இந்திய ஜோடி அஸ்வினி – தனிஷா சாம்பியன் பட்டம் வென்றது

நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம்  மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹுங் என்-டிஸு லின் யு பெய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மொத்தம் 31 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ-கே.சாய் பிரதீக் ஜோடி தோல்வி கண்டது. இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் மேட்ஸ் வெஸ்டர்கார்ட்-கிறிஸ்டின் புஷ் ஜோடி 21-14, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் தனிஷா-சாய் பிரதீக் ஜோடியை வீழ்த்தியது.