Tamilசெய்திகள்

நீட் தேர்வில் மத்திய அரசின் சூழ்சி அம்பலமாகியுள்ளது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்,” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்? தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று நாங்கள் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.

மருத்துவராகும் கனவுடன் புறப்படும் ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழுயில் தள்ளும் நீட் அநிநீக்கு, மத்திய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.