Tamilசெய்திகள்

பாகிஸ்தானில் கனமழை – மழை, வெள்ள பாதிப்பில் 23 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் நரோவால் மாவட்டத்தில் 5 பேரும், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உள்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் பலியாகினர்.

மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வா