Tamilவிளையாட்டு

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி – இந்திய வீராங்கனைகள் லவ்லினா, சாக்‌ஷி காலியிறுதிக்கு முன்னேறினார்கள்

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 52 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்ஷி, கஜகஸ்தானின் ஜாஜிரா ரக்பாயேவாவை எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகளை விட்டு ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி 5-0 என்ற கணக்கில் ஜாஜிராவை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

54 கிலோ எடைப்பிரிவின் 3-வது சுற்று பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி 3-4 என்ற கணக்கில் மெக்சிகோவின் வனெசா ஆர்டிஸ்சிடம் தோற்று வெளியேறினார்.