Tamilசெய்திகள்

ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.25.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை அரியலூர கொல்லாபுரத்தில் நடக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

விழாவில், 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.