Tamilசினிமா

விஜையின் லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வாரம் முடிவடைகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் லியோ படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் முடிவடையும் என்றும், இரண்டு வார இடைவேளை பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.