Tamilசெய்திகள்

தலாய்லாமாவை கொலை செய்ய முயற்சி – 5 பேர் கைது

திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து தலாய் லாமா, பீகார் கவர்னர் சால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த 27-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் பதுங்கி இருந்த ஜே.எம்.பி. அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமதுஅலி, பைகம்பர் ஷேக், முனீர்நூர், அஸ்சாம் மொஹீன் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை பலத்த பாதுகாப்புடன் பீகாருக்கு அழைத்து சென்றனர்.

கைதான 5 பேரையும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *