Tamilசெய்திகள்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! – சரிந்த கட்டிடங்கள்

சீனாவின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் உள்ளூர் நேரப்படி இன்று(மே 18) அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் கட்டிட இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். அங்கு இடிபாடுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சக்தி வாய்ந்த் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.