Tamilசினிமா

திரைப்படம் வெற்றி பெறுவதற்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழியும் பிரபல விஜே மற்றும் நடிகை ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படம் வெளியாகும் முன்பு இதே போல் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *