Tamilசெய்திகள்

அசாம் மாநிலத்தில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 14 பேர் பலி

அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர். சுற்றுலா சென்று விட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் டெர்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நிலக்கரி லாரி பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த 14 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.