Tamilசெய்திகள்

அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை – செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் மேகலா தெரிவித்துள்ளார்.