Tamilசெய்திகள்

அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருவொற்றியூர் பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

* மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை.

* தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.

* ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது.

* அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

* அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம்.

* அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.