Tamilசெய்திகள்

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தங்கள் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன – ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2-வது கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.