Tamilசெய்திகள்

உக்ரைன் போரில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் பெங்களூர் வந்தது – முதலமைச்சர் அஞ்சலி

 

உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்ற மருத்துவ படிப்பு மாணவர் உயிரிழந்தார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நவீன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மத்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் நவீன் சேகரப்பா உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் நவீன் உடலுக்கு, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு நவீன் உடல் வைக்கப்படுகிறது.

இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் நவீன் உடல், மருத்துவப் படிப்புக்காக எஸ்.எஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று நவீன் தந்தை சங்கரப்பா தெரிவித்துள்ளார்.