Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு மழையால் தடை ஏற்பட்டால் அடுத்த நாள் வைக்கப்படும் – ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

இந்நிலையில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள் மற்றும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால், ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.