Tamilசெய்திகள்

ஊரப்பாக்கத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 சிறுவர்கள் ரெயில் மோதி பலி

ஊரப்பாக்கம் ரெயில் நிலைய பகுதி விடுமுறை தினமான இன்று பரபரப்பாக காணப்பட்டது. காலை 11 மணி அளவில் 3 சிறுவர்கள் தண்டவாளத்தை கடந்தனர். மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தை 3 பேரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் 3 பேர் மீதும் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதைப் பார்த்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாள பகுதியில் சிதறி கிடந்த 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்.

இதில் சுரேஷ், ரவி, மஞ்சு நாதா ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சுரேசுக்கு 15 வயது ஆகிறது. ரவிக்கு வயது 12. அண்ணன்-தம்பிகளான இருவரும் வாய் பேச முடியாதவர்கள். 15 வயதான சிறுவன் மஞ்சுநாதாவுக்கு காது கேட்காது. 3 சிறுவர்களும் பெற்றோர்களுடன் வந்திருந்தபோதுதான் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தை கடந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.