Tamilசெய்திகள்

கடற்கரை – தாம்பரம் இடையிலான ரெயில் சேவை சீரானது

சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து இன்று காலை 5.30 மணி முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு பின் விபத்துக்குள்ளான ரெயில் மீட்கப்பட்டு ரெயில் இயக்கம் சீரானது. கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை இனி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரெயில் சேவையும் சீரானது.