Tamilசெய்திகள்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் ஐந்து மாநில தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.