சென்னை 360

பச்சையப்பன் மண்டபம், சைனா பஜார்

‘சூழ்ச்சி நிறைந்த இந்தியன். இவன்தான் இருண்ட திட்டங்களுக்குத் தலைசிறந்த ஆலோசகர். புத்திக்கூர்மையில் ஓர் ஆசிய மாக்கியவெல்லி. அவனது முகத்தில் முதிர்ச்சிக்குத் தோன்றுவதைவிட அதிகமான சுருக்கங்கள் உள்ளன. இது மனசாட்சியின்றி, தனிப்பட்ட அனுகூலத்தை அடைவதற்குப் பல சூழ்ச்சிகளைச் செய்ததற்காக அவனுக்குக் கிடைத்த பரிசு!’ 

ஒரு துபாஷை இவ்வாறு விவரிக்கும் நபர் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் வால்டர் ஸ்காட் .

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்டபோது ஏராளமான கப்பல்கள் மெட்ராஸ் துறைமுகத்தில் இருந்து தொலைதூரச் சந்தைகளுக்கு ஜவுளிச் சரக்குகளுடன் சென்றன. அக்காலத்தில் ஆசிய துணிப்பொருள்களுக்குப் பெறக்கூடிய லாபம் மிகப்பெரியது.

View more in kizhakkutoday.in