Tamilசெய்திகள்

சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து – 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

3 மணிநேரம் போராடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.