Tamilசெய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு – ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டி தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்கப்படுகிறது.