Tamilசெய்திகள்

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனை தடை செய்தார்கள் என்பதற்காக தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என்று இல்லை. தமிழ்நாட்டில் குட்காவை தடை செய்துள்ளோம்.

ஆனால், கர்நாடகாவில் அதை தடை செய்யவில்லை. எந்த உணவு பொருளில் கெடுதல் இருக்கிறதோ அதை உணவுப்பொருள் பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து தடை செய்வோம். ஏற்கனவே, பஞ்சுமிட்டாயில் கெடுதல் இருந்ததால் தடை செய்தோம். தமிழக கவர்னர் நாள்தோறும் அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முதலமைச்சர் முழுமையாக குறைத்துள்ளார். பா.ஜனதாவின் எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.