Tamilசென்னை 360

தியோசோபிகல் சொசைட்டி

மெட்ராஸ் தெற்கில் விரிவடைந்து, அடையாறு ஆற்றைக் கடக்கக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் ஆனது. ஆனால் அது பொதுஜன வசிப்பிடமாக மாறுவதற்கு முன்னரே இங்கு ஒரு சொசைட்டி இயங்கிக் கொண்டிருந்தது.

கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பிறகு, அதிகபட்ச வெளிநாட்டினரை மெட்ராஸுக்குக் அழைத்து வந்தது தியோசோபிகல் சொசைட்டிதான். ஆனால் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் இந்திய கலாச்சாரத்தை மதித்து, அதன் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் பங்களித்தவர்கள்.

அடையாறு ஆற்றைக் கடந்ததும் ஒரு பெரிய காடு. ஓர் உக்ரைன் நாட்டுப் பெண்மணியும் ஓர் அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரரும் உலகின் ஆசியாவின் ஆன்மீகத்தில் மயங்கி 1882 ல் இங்கு வந்தனர்.

மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் ஓல்காட் ஆகியோர் ஆரம்பத்தில் நியூயார்க்கில்தான் தியோசோபிகல் சொசைட்டியைத் தொடங்கினர். அங்கு உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியைப் பரப்புவதும், ஆசியாவின் பழம்பெரும் மதங்களில் ஆன்மீக உண்மையைத் தேடுவதும் அவர்களின் லட்சியங்களாக இருந்தன.

View full article at kizhakkutoday.in