Tamilசென்னை 360

மெட்ராஸ் துறைமுகம்

கடல் வணிகத்தை நம்பியிருந்த ஓர் ஊருக்கு மிக முக்கியமான தேவை ஒரு துறைமுகம். கப்பல்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் இல்லாமல், எந்த வணிகரும் ஒரு நகரத்தில் வர்த்தகம் செய்யத் தயங்கியிருப்பார்கள். இருப்பினும் 250 ஆண்டுகளாகத் துறைமுகம் இல்லாமல் மெட்ராஸ் வெற்றிபெற முடிந்தது. இதில் சரித்திர முரண் என்னவென்றால், மெட்ராஸின் மிகவும் வளமான காலம் அந்த நேரத்தில்தான் இருந்தது.

ஆரம்ப காலத்தில் எந்தக் கப்பலும் மெட்ராஸ் கரைக்கு வர முடியாததற்குக் காரணம், கரைக்கு இரண்டு மைல் தொலைவில் கடலுக்கு அடியில் ஒரு மணல் திட்டு இருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த மணல் திட்டு, ஒரு மலைத்தொடருக்குச் சமானம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் ஆண்டுதோறும் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் மணலை அள்ளியெடுத்துச் சென்று கடலில் செலுத்தி வந்ததன் விளைவாக நீருக்கு அடியில் உருவானது அந்த மலை. ஆனால் கடலுக்கு மேல் வருபவருக்கு அதன் எந்த அறிகுறியும் தெரியாது.

View More on kizhakkutoday.in