Tamilவிளையாட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – 180 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்

வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை வங்காளதேசம் அணி தொடங்கியது. 2 ரன்னில் மஹ்முதுல் ஹசன் ஜாய் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது நாள் ஆட்டம் முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 38 ரன்கள் எடுத்தது.