Tamilசென்னை 360

விக்டோரியா பொது அரங்கு

கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய் கலகத்தில் சிக்கித் தவித்த காலத்தில், பிரித்தானிய அரச குடும்பம் இந்தியா உட்பட அதன் சொத்துக்களைக் கையகப்படுத்த முடிவு செய்தது. விக்டோரியா, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி ஆனார். அவர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் ராணியாக இருந்தார், மேலும் 44 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார். அவரது வயது மற்றும் அரச வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் பேரரசில் அவர் பெயரிடப்பட்ட கட்டடங்களுடன் கொண்டாடப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருந்தன. இன்றோ ஒன்று அல்லது இரண்டு மட்டுமே உள்ளன.

மெரினா கடற்கரை குறுகிய மணல் பரப்பாக இருந்தபோது, பூங்கா நகர் மட்டும்தான் மெட்ராஸின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. 117 ஏக்கர் நிலப்பரப்புக்குப் பூங்காவாக இருந்ததால் அந்தப் பகுதிக்கு ‘பார்க் டவுன்’ என்று பெயர் வந்தது.

View more on kizhakkutoday.in