Tamilசென்னை 360

புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான புதினம் ‘கல்லிவர் ட்ராவல்ஸ்’. அதில் லில்லிபுட்டுக்குச் செல்லும் முன், ஜார்ஜ் கோட்டைக்கு கல்லிவர் வந்ததாகக் கதையில் சொல்லப்படும்.

மெட்ராஸ் இன்று அதன் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்காக உலகம் முழுவதும் மதிக்கப்படும் நகரமாக உள்ளது. வெற்றியின் படிகளில் ஏற விரும்பும் பல புலம்பெயர்ந்தோருக்கு நகரம் ஒரு காந்தமாகச் செயல்படுகிறது. இவை அனைத்தும் 384 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜவுளிக் கிடங்காகத் தொடங்கியதுதான். பின்னர் அது ஒரு கோட்டையாக வளர்ந்து இறுதியாக உலக வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கான ஆரம்பப் படிகளை அமைத்தது.

இந்த இடத்தில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. வங்கக் கடலுக்கடியில், மலை போல மணல் மேடு, கப்பல்கள் கரையை நெருங்குவதைத் தடுத்தது. கடுமையான புயல்கள் நகரத்தை அடிக்கடி தாக்கின. ஒரு வணிக நகரமோ, கோட்டையோ இங்கு வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை.

View more on kizhakkutoday.in