Tamilசெய்திகள்

வேளான் பட்ஜெட்டில் ஒரு கிராமம், ஒரு பயிர் புதிய திட்டம் – 15,280 கிராமங்களில் அறிமுகம்

தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

* சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

* உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

* பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

* 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ரூ.200 கோடி நிதி.

* பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.

* துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

* எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

* வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

* நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.