Tamilசெய்திகள்

பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது – அன்புமணி, எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

* அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.

* மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

* இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி.

* திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

* எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.

இதன்பின்னர் பேசிய அன்புமணி,

* பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.

மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.

* வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார்.