Tamilசினிமா

‘அண்ணாத்த’ படத்திற்காக தீயாக பணியாற்றும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

அதன்பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். அதன்பிறகு முழுநேர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபட இருக்கிறார்.