Tamilசெய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேபுளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா. வயது 17. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் இன்று காலை பள்ளி செல்வதற்காக மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் அங்கு வந்தார்.

அவர் திடீரென மாணவன் ஜீவாவை கத்தியால் குத்தினார். இதில் பலத்தை காயம் அடைந்த ஜீவா சம்பவ இடட்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி ஆனந்த் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது காதல் பிரச்சினையில் ஜீவா கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவன் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.