Tamilசெய்திகள்

கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் கவர்னர் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் கவர்னர்.

* துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் வரம்பு மீறி கவர்னர் செயல்படுகிறார். 3 ஆண்டுகளுக்கு பிறகும் துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

* கவர்னரின் நடவடிக்கைகளுக்கு தேர்தலுக்கு பிறகு முடிவு கட்டப்படும். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்.

* தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை.

* மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.