Tamilசெய்திகள்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43 வது ஆண்டு நினைவு நாள் – சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து வணங்கினார். அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நடிகர் எஸ்.வி.சேகர், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், தி.மு.க. பேச்சாளர் தமிழன் பிரசன்னா, தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், பொருளாளர் தண்டபாணி, மகளிர் அணி நிர்வாகி ஷகிலா, மாணவர் அணி நிர்வாகி ஆல்வின்.

தமிழக பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், எழும்பூர் காமேஷ், விஜய குமார், மயிலை பாலாஜி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், பார்த்திபன், எழும்பூர் பகுதி செயலாளர் சென்ட்ரல் நிஷார், நிர்வாகிகள் பாஸ்கர், சுரேஷ், அரி, சந்திரமோகன், மகளிர் அணி மல்லிகா தயாளன், தர்மபுரி பாலமுரளி, கவிஞர் மணிவேந்தன், எழும்பூர் செல்லப்பாண்டி, மின்னல் பிரேம், அம்பத்தூர் தாமோதரன், புத்தகரம் ரவிச்சந்திரன், அருண்குமார், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து,

தே.மு.தி.க. துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் கு.நல்லதம்பி, உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் விசாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மாறன், நிர்வாகிகள் பூங்கா எம்.ரமேஷ், எஸ்.கே.செந்தில்நாதன், த.பிரபு, வரதன் பாபு, க.கோவேந்தன், சத்தியவேல், லே.பாரதி, அன்பு, ஜோதி, ஸ்ரீநாத், சேகர், மதி, டேவிட், பாலாஜி, லட்சுமணன், புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், நிர்வாகிகள் தரணிமாரி, மகிமைதாஸ், பாக்சர் தாஸ், ரவீந்திரன், சுரேஷ், புரட்சிதாஸ்,

சமத்துவ மக்கள் கழக பொருளாளர் வக்கீல் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், நிர்வாகிகள் சாபுதீன், ராஜேந்திரன், சீனிவாசன், சாமுவேல், சுடலைமணி, பாக்யராஜ், ராஜ்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் என்.ஆர்.டி. பிரேம்குமார், மாநில செயலாளர் எம்.வி.எம். ரமேஷ்குமார், நிர்வாகிகள் சிவகுமார், சந்தானம், செந்தில்குமார், செல்வன், பாலமுருகன், ராஜ்நாடார், ராபர்ட், நாகராஜ், சுந்தரலிங்கம், சுயம்புலிங்கம், உத்திரகுமார், வி.பி.ஐயர், முருகேச பாண்டி, ரமேஷ். நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிம பரிபாலன சங்க தலைவர் வி.ஆனந்தராஜ், பொதுச் செயலாளர் பி.சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர் செல்வகுமார், ராமராஜ்,

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை மாரித் தங்கம், மத்திய சென்னை வியாபாரிகள் சங்க நலச்சங்க தலைவர் மாரிமுத்து, ஞாயிறு அனைத்து வியாபாரிகள் சங்க நலச்சங்க தலைவர் மாரிமுத்து, ஞாயிறு அனைத்து வியாபாரிகள் நலச்சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயல் செயலாளர் வி.எஸ்.லிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.