Tamilசெய்திகள்

மணிப்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

நேற்று தவுபால் மாவட்டத்தில் ராணுவ முகாமில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சண்டையில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

ஆயுத கடத்தல் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த கும்பல் இந்திய ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். மேலும், இம்பால் மேற்கு மற்றும் சுரசந்த்புரில் உள்ள பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர். இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்ட எல்லையில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.