Tamilசினிமா

மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை அதிகரித்து திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், மலையாள நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சிறு காய்ச்சலை தவிர நலமாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.